என் மலர்
உள்ளூர் செய்திகள்

முறைதவறிய காதலால் விபரீத முடிவு: நெல்லையில் தற்கொலை செய்த சென்னை புதுமண தம்பதி

- தற்கொலை செய்தவர்கள் எழுதிய கடிதம் சிக்கியது.
- கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.
நெல்லை:
சென்னை ராயபுரம் துரை தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் விஜயன்(வயது 26). சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்த வர் காந்தி. இவரது மகள் பவித்ரா(24).
இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதனால் கடந்த 1 வாரத்திற்கு முன்பு 2 பேரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர் விஜயனின் நண்பர் வீட்டில் 2 பேரும் தங்கியிருந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, புதுமண தம்பதி சென்னையில் இருந்து கடந்த 7-ந்தேதி நெல்லைக்கு வந்துள்ளனர். பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினர். இந்நிலையில் நேற்று மதியம் வரை அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை எட்டிப்பார்த்த போது, அவர்கள் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேர் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று காலை நெல்லை வந்து சேர்ந்தனர். இதனிடையே புதுமண தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
தற்கொலை செய்து கொண்ட விஜயனும், பவித்ராவும் உறவு முறையில் அண்ணன்-தங்கை ஆவர். பட்டதாரிகளான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று வந்த நிலையில் செல்போனில் பேச்சை தொடர்ந்தனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இந்த விஷயம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வரவே, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் 2 பேரும் காதலை கைவிட மறுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனியாக வாழ்வதற்காக நெல்லைக்கு வந்த நிலையில் வீடு கொடுக்க யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து தனது உறவினர் ஒருவரின் மூலமாக விஜயனுக்கு பாளை கோட்டூரில் வீடு கிடைத்தது. அந்த வீட்டுக்கு முன்பணமாக ரூ.15 ஆயிரம் செலுத்திவிட்டு 2 பேரும் அங்கு வசித்து வந்தனர்.
நெல்லையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் இன்று முதல் விஜயன் வேலைக்கு செல்வதற்காக முடிவு செய்திருந்த நிலையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனிடையே அவர்களது அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது உடல்களை பெற்றோரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.