என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பரிதாப சாவு

- ராகுல் (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- தொட்டிபட்டியை சேர்ந்த நடராஜ் (60) என்பவரது மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.
பரமத்திவேலூர்:
–நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை பகுதியை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகன் ராகுல் (வயது 22). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தொண்டிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே தொண்டிபட்டிபுதூரில் இருந்து வேலக வுண்டம்பட்டி நோக்கி வந்த தொட்டிபட்டியை சேர்ந்த நடராஜ் (60) என்பவரது மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ராகுல் மற்றும் நடராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராகுல் மற்றும் நடராஜ் ஆகிய இருவரும் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த வேலகவுண்டன்பட்டி போலீசார், விபத்தில் உயிரிழந்த நடராஜ் மற்றும் ராகுல் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.