search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருநாவலூர் அருகே இருவேறு சாலை விபத்தில் 2 பேர் பலி
    X

    திருநாவலூர் அருகே இருவேறு சாலை விபத்தில் 2 பேர் பலி

    • பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு
    • மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 51). இவர் தனது மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை சென்று வீடு திரும்பினார். பாதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த தங்கராசு, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    ஆசனூர் அருகேயுள்ள காய்ச்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (70). இவர் இன்று அதிகாலை வயலுக்கு நடந்து சென்றார். அவ்வழியே வந்த அடை யாளம் தெரியாத வாகனம் இவர் மோதி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி இறந்து கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் எடக்கல் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமை யிலான போலீசார் விரைந்து சென்றனர். ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×