search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    உளுந்தூர்பேட்டை அருகே:சாலை விபத்தில் பேக்கரி மாஸ்டர் பலி
    X

    உளுந்தூர்பேட்டை அருகே:சாலை விபத்தில் பேக்கரி மாஸ்டர் பலி

    சென்னை யில் இருந்து கோபிசெட்டி பாளையத்திற்கு சென்று கொண்டிருந்த ஸ்கார்ப்பி யோகார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகரை சேர்ந்த வர் ராஜேஷ் (வயது 28). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பேக்கரி யில் மாஸ்டராக பணி யாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எலவனா சூர்கோட்டை அருகேயுள்ள கீரப்பாளையம் மேம்பாலம் அருகே சென்று கொண்டி ருந்தார்.அப்போது சென்னை யில் இருந்து கோபிசெட்டி பாளையத்திற்கு சென்று கொண்டிருந்த ஸ்கார்ப்பி யோகார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த எலவனாசூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×