search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒடிசா ரெயில் விபத்து காரணமாக சென்னை-கன்னியாகுமரியில் இருந்து செல்லும் 11 ரெயில்கள் ரத்து
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒடிசா ரெயில் விபத்து காரணமாக சென்னை-கன்னியாகுமரியில் இருந்து செல்லும் 11 ரெயில்கள் ரத்து

    • சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து.
    • சிலிகான் டவுனில் இருந்து எழும்பூர் வழியாக தாம்பரம் வரை செல்லும் நகூன் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.

    சென்னை:

    ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இன்று மாலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண். 12666).

    இன்று காலை சென்னை சென்ட்ரல் வரவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (எண். 12842), பெங்களூருவில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.12509).

    ஹவுராவில் இருந்து பெங்களூரு வரவேண்டிய ரெயில் (எண்.12863) ஹவுராவில் இருந்து நேற்று பகல் 11.55 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு சென்னை வரும் ரெயில் (எண்.12839).

    இதேபோல் ஹவுராவில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு செல்லும் ரெயில் (12245), (12551), இன்று பகலில் பெங்களூருவில் இருந்து புறப்படும் வண்டி எண். 12684, 12253 ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சிலிகான் டவுனில் இருந்து எழும்பூர் வழியாக தாம்பரம் வரை செல்லும் நகூன் எக்ஸ்பிரஸ் (15630) மற்றும் பெங்களூருவில் இருந்து புறப்படும் (22503) ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×