search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு 2,315 சிறப்பு பஸ்கள்
    X

    விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு 2,315 சிறப்பு பஸ்கள்

    • தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • தொடர் விடுமுறையால் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்தம், 7-ந்தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி, 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாள் என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் ஆயிரத்து 30 பஸ்களும், மற்றும் 8-ந் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 6 மற்றும் 7-ந்தேதிகளில் 192,3150 பஸ்களும், மாதாவரத்தில் இருந்து 6 மற்றும் 7-ந் தேதிகளில் 20 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×