என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சின்னசேலம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி
- சண்முகப்பிரியனுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்ன சேலம் நோக்கி சென்றார்.
- இளங்கோவனும், சண்முகப்ரியனும் பலத்த காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி என்ற மனைவியும், சண்முகப்பிரியன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் இளங்கோவன், அவரது மகன் சண்முகப்பிரியனுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்ன சேலம் நோக்கி சென்றார். அப்போது பங்காரம் அருகே உள்ள சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ் இணங்கோவன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இளங்கோவனும், சண்முகப்ரியனும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்