என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னம் அருகே அறுவடை செய்யப்பட்ட 100 மூட்டை மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசம்

- குன்னம் அருகே அறுவடை செய்யப்பட்ட 100 மூட்டை மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசமானது
- பக்கத்தில் தட்டைகளுக்கு வைத்த தீ பரவியதால் விபரீதம்
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மற்றும் வேப்பந் தட்டை தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பல்லாயிரக் கணக்கா ன ஏக்க–ரில் மக் காச்சோளம் பயி–ரிட்டுள்ள–னர். தற்போது அந்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களாக அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடு–பட்டு வருகின்றனர்.இந்தநிலையில் பெரம்ப–லூர் மங்களம் கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55) என்பவர் அந்த பகுதி–யில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து 100 மூட் டைகளில் கட்டி வயல்வெளி–யில் பாதுகாப்பாக வைத்தி–ருந்தார்.இதற்கிடையே நேற் றைய தினம் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அறுவடைக்குப் பின் தோட்டத்தில் கிடந்த உதிரிகள் மற்றும் சோள தட்டைகளை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது.இதில் எதிர்பாராத விதமாக அந்த தீ ஆறுமு–கத்தின் தோட்டத்தி–லும் பரவியுள்ளது.
உடனடியாக மங்களமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருந்தபோதிலும் அறு–வடை செய்து 100 மூட்டை–களில் கட்டி வைத்திருந்த முத்துச்சோளம் முழுவதும் தீக்கிரையானது. இது தொடர்பாக ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பக் கத்து தோட்ட விவசாயி செந்தில்குமாரிடம் விசா–ரணை நடத்தி வருகிறார்.அறுவடை செய்து தோட் டத்தில் வைத்திருந்த 100 மூட்டை மக்காச்சோள பயிர் கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட விவசாயி நஷ்டஈடு கோரியுள்ளார்.