search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே மூங்கில்பாடி பட்டு குளம்  தூய்மைப்படுத்தும் பணி
    X

    பெரம்பலூர் அருகே மூங்கில்பாடி பட்டு குளம் தூய்மைப்படுத்தும் பணி

    • பெரம்பலூர் அருகே மூங்கில்பாடி பட்டு குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தூய்மையினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களது கிராமங்களை இளைஞர்கள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தூய்மைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது தான் நம்ம ஊரு சூப்பரு திட்டம்.பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தும் பழக்கத்தினை ஊக்குவிப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் மூங்கில்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பட்டுக்குளத்தினை கலெக்டர் கற்பகம், உள்ளூர் பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். இப்பணியில் இளைஞர்கள் ஆர்வமுடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டு குளத்தினை தூய்மைபடுத்தினர்.மேலும் கழிவு நீர் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணி, அங்கன்வாடி கட்டிடம், நியாய விலைக் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம ஊராட்சி சேவை மையம், சத்துணவு மையம், நூலகம், மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×