search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் நரிக்குறவர் காலனியில் கலெக்டர் ஆய்வு
    X

    பெரம்பலூர் நரிக்குறவர் காலனியில் கலெக்டர் ஆய்வு

    • பெரம்பலூர் நரிக்குறவர் காலனியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
    • பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சிமெண்டு சாலைகள் இல்லாத தெருக்களில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கவும், ஏற்கனவே சாலைகள் இருக்கும் பகுதிகளில் புதிய கழிவுநீர் வாய்க்கால்களை அமைக்கவும், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்குகள் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? என்று அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும், அப்பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து, உரிய நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, எறையூர் பகுதியில் சிப்காட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டு வரும் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட கலெக்டர் அதனை சுற்றியுள்ள கிணறுகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமானங்களை அமைத்திட வேண்டும் என்று அந்நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×