என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்வோர் பாதுகாப்பு தெருமுனை பிரச்சாரம்
    X

    நுகர்வோர் பாதுகாப்பு தெருமுனை பிரச்சாரம்

    • நுகர்வோர் பாதுகாப்பு தெருமுனை பிரச்சாரம் நடந்தது
    • துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நல மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த தெருமுனை பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் கலந்து கொண்டு கொடியசைத்து தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    இக்குழுவினர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நுகர்வோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்த பிரச்சாரம் பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் முடிவடைந்தது.

    Next Story
    ×