search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
    X

    பெரம்பலூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

    • பெரம்பலூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணிகளுக்கு கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ டிப்ளமோ, பட்டப்படிப்பு, டி.பார்ம், லைபரியன் முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×