என் மலர்
பெரம்பலூர்
- இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
- இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், உங்கள் தொகுதிகளுக்கு என்னென்ன செய்தேன் என இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.
பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .
இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.
செட்டிகுளம் பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் புகழ்பெற்றது. அத்தகைய செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு விரைவில் நான் பெற்று தருவேன்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.
தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியார் மோடி.
மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.
இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.
என்னை எதிர்த்து போட்டியிடுவர் எவ்வளவு பெரிய மலைக்கோட்டை மன்னனின் மகனாக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள், நமது எதிரி நாடான சீனாவில் உள்ள நிறுவனங்களுடன் வியாபாரம் செய்பவர்கள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள்.
மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சீன நாட்டு நிறுவனங்களிடம் வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் துரோகிகள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.
மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பர்களுக்கு தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று பாரிவேந்தர் தெரிவித்தார்.
- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
- பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர், அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரித்தார்.
திருச்சி:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர் கிராமத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தீர்கள். நான் பாராளுமன்றத்தில் பேசியது மற்றும் பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஒரு புத்தகம் உங்களுக்கு வழங்கியுள்ளேன். மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுத்தது, எதற்காக கொடுத்தது என்பதையும் இதில் விளக்கியுள்ளேன்.
இதுபோன்ற புத்தகம் போடுவதற்கு துணிச்சல் வேண்டும். நான் ஏழைகளுக்காக உதவ வந்த எம்.பி. எனக்கு வழங்கப்பட்ட 17 கோடி ரூபாய் பணத்தில் 42 வகுப்பறைகள், நியாயவிலைக் கடைகள், சமூக நலக் கூடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன்.
கடந்த முறை உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி 118 கோடி ரூபாய் செலவில் 1,200 ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளேன். இது இம்முறையும் தொடரும்.
இந்த முறை 1,500 ஏழைக் குடும்பங்களை தேர்ந்தெடுத்து உயர் மருத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.
வரும் தேர்தலில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடந்து வருகிறது. ரெயில் பாதை அமைக்கும் முயற்சியில் பாதியளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகள்தான். அவர்கள் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை.
நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதை செய்யவில்லை. நீட் என சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கழித்து கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.
இதேபோல், அடைக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் பேசியதாவது:
ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வீட்டு வரி, மின்சார வரி, நில வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டது. இதனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது. எனவே நல்லவர்கள் யார் என தேர்வு செய்து வாக்களிக்க வேண்டுகிறேன்.
தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள் என உலகமெல்லாம் பேசுகிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் காலம் முழுவதும் கஷ்டத்தில் இருக்க வேண்டியதுதான். 1,000 ரூபாய் உரிமைத்தொகையை பாதி பெண்களுக்கு வழங்கவில்லை.
நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பதால் தி.மு.க.வால் ஒன்றும் செய்யமுடியாது.
இங்கு நான்கு வழிச்சாலை அமைக்கச் சொல்லி கேட்டு வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்ததும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கிறேன்.
நேரு மகனுக்கு வாக்களித்து மற்றொரு ராமஜெயத்தை உருவாக்கி விடாதீர்கள். நாடெல்லாம் எனது, மக்கள் எல்லாம் எனது அடிமைகள் என சென்னையில் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். சூரியன் எப்படி பகலில் சுட்டெரிக்கிறதோ, ரத்தத்தை உறிஞ்சுகிறதோ, அதுபோல் சூரியனுக்கு வாக்களித்தால் உங்கள் ரத்தம் உறிஞ்சப்படும்.
எனவே கல்விக்கு தெய்வமான சரஸ்வதி தேவி அமர்ந்துள்ள தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன்.
- 1200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அய்யர்மலை என்ற இடத்தில், டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க, அ.ம.மு.க, பா.ம.க, த.மா.கா, ஓ.பி.எஸ் அணி, தமிழர் தேசம் கட்சி, மக்கள் ராஜ்ஜியம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் பேசிய டாக்டர் பாரிவேந்தர், உங்களை தேடி வாக்குகளை கோரி வந்துள்ளேன் - தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 மாணவர்களை இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆக்கியுள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் எம்பியாக தேர்வான பின்னர் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்று டாக்டர் பாரிவேந்தர் பேசினார். வரும் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கு இடமளிக்காமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.
- தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.
- அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில், தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு, பொதுமக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. மேலும், டாக்டர் பாரிவேந்தருக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருச்சி SRM ஹோட்டல் வளாகத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மத்திய மண்டல தலைவர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட தலைவர் நித்யா நடராஜன், செயலாளர் உமாபதி மற்றும் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் செய்த நற்பணிகள் அடங்கிய புத்தகத்தை, டாக்டர் பாரிவேந்தர், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
குறும்பர் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து S.T. பிரிவுக்கு மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்துள்ளார்.
இந்திய ஜனநாயகக் கூட்டணியில், பெரம்பலூர் தொகுதியில் IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு திரட்டி வருகிறார். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலுக்கு வருகை தந்தபோது, அவருக்கு, தமிழ்நாடு குறும்பர் முன்னேற்ற சங்கத்தின் செயல் தலைவர் உதகை செங்குட்டுவன் மற்றும் கோயில் நிர்வாக தலைவர் தர்மராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, கோயிலில் மகாலெட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகாலெட்சுமி அம்மனை டாக்டர் பாரிவேந்தர் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தார். டாக்டர் பாரிவேந்தருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், குறும்பர் சமுதாய மக்களின் விருப்பத்தின் பேரில் அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். மிகவும் தொன்மையான இக்கோயிலில், பல பேருக்கு இலவசமாக திருமணம், அன்னதானம் வழங்கப்பட்டு வருவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். குறும்பர் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான MBC யிலிருந்து ST பழங்குடியினர் வகுப்புக்கு மாற்றுவதற்கான கோப்புகள், மத்திய அரசிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது, குறும்பர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்று பாரிவேந்தர் உறுதியளித்தார்.
டாக்டர் பாரிவேந்தரின் இலவச உயர் கல்வி திட்டத்தால் தன்னை போன்ற ஏழை எளிய மக்களின் கனவு நனவாகியதாக தெரிவித்துள்ள SRM பல்கலைக்கழகத்தில் பயிலும் துறையூரை சேர்ந்த மாணவி அகல்யா, தங்கள் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் எம்.பியாக வெற்றிபெறச் செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
2019 தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பாரிவேந்தர், மகாலெட்சுமி திருக்கோயிலில் அஷ்டலட்சுமி பிரதிஷ்டை செய்தபோது நன்கொடை வழங்கியதாகவும், தங்கள் வாக்குகள் அனைத்தும் டாக்டர் பாரிவேந்தருக்குதான் என்றும் கலைச்செல்வி என்பவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ராகவி என்பவர், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் சமுதாய மக்கள் டாக்டர் பாரிவேந்தரின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும், தங்களுடைய ஆதரவு அவருக்குதான் எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், I J K முதன்மை அமைப்புச் செயலாளர் S.S.வெங்கடேசன், முதன்மைச் செயலாளர் சத்தியநாதன் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.
- தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
இந்திய ஜனநாயகக் கூட்டணியில், IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வண்ண பேப்பர்கள் மற்றும் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், 2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, ரெங்கநாதபுரத்தில் இருந்து 2 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தில் பட்டதாரிகளாகினர் என தெரிவித்தார். தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற உடன், இப்பகுதிக்கு ரேசன் கடை கட்டித் தரப்படும் என்றும், நீர்த்தேக்க தொட்டி, அமைக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். விவசாய களம் மற்றும் மயானபாதை சீர்படுத்தி தரப்படும் என்றும், கால்நடை மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரப்படும் என்றும் பாரிவேந்தர் உறுதி அளித்தார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, இளைஞர்களை சீரழிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி விட்டதாக விமர்சித்தார். ஊழல் கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு ஊழல் மட்டும் தெரியும், அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது எனச் சாடிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்களை சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, வேங்கடத்தானூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வன்ண பேப்பர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு செய்த நற்பணிகள் குறித்து புத்தகமாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். வேங்கடத்தானூருக்கு MP நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டி கொடுத்திருப்பதாக தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், மக்கள் தேவைகளை நிறைவேற்றியதில் மன நிறைவாக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக ஊழல், லஞ்சம் இல்லாத சிறப்பான ஆட்சியை நடத்தினார் என்றும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஊழலில் பழக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார். ஒட்டுக்கு பணம் கொடுப்பதற்காக ஊழல் செய்யும் திராவிட திருவாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்காட்டுப் பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த டாக்டர் பாரிவேந்தர், தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 118 கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கியதாகவும், இந்தியாவில் எந்த MP-யம் இதுபோல் செய்ததில்லை எனவும் குறிப்பிட்டார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா பெருமையடைவதாகப் பேசிய டாக்டர் பாரிவேந்தர், திமுக என்றாலே லஞ்சம், ஊழல்தான் என சாடினார். நல்லவர்களை தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, கீரம்பூர் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், பெரம்பலூர் தொகுதியில் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரவித்தார். பிரதமர் மோடியை உலக நாடுகள் Boss என அழைப்பதாக பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டு, தற்போது மீண்டும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புத்தனாம்பட்டி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து. வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், கடந்த முறை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊழல் கட்சியிலிருந்து வரும் நபரை புறக்கணித்துவிட்டு, மக்கள் சேவையாற்றும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
- மோடி ஒரு யோகி என்றும் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென அவர் உழைத்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்
- தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என குற்றஞ்சாட்டினார்
திருச்சி மாவட்டம் வாளசிராமணி பகுதியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், தான் செய்த பணிகள் குறித்து Progress Report போல தொகுதி மக்களுக்கு புத்தகமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த புத்தகத்தை நீங்கள் படித்தீர்களானால் தனக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் போடுவீர்கள் என கூறினார். எம்.பி தொகுதி நிதியான 17 கோடி ரூபாயில் 42 வகுப்பறைகள், சமூக கூடங்கள், ரேசன் கடை, உள்ளிட்டவை கட்டி கொடுத்து உள்ளதாக கூறினார்.
தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என குற்றஞ்சாட்டினார். மோடி ஒரு யோகி என்றும் நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென அவர் உழைத்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து வேலம்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தருக்கு, கிராம மக்கள் திரளாகக்கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தான் எம்.பி ஆனால் ஆயிரத்து 500 ஏழைக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மோடி, நாட்டு மக்கள் வறுமையில் இருக்க கூடாது என்பதற்காக உழைத்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தான் வெற்றி பெற்று வரும்போது நிச்சயமாக உங்கள் ஊர் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
தொடர்ந்து ஊரக்கரை பகுதியில் ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தருக்கு, அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாக்குறுதிகளைத் தெரிவித்து அவர் வாக்கு சேகரித்தார். தா.பேட்டை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அரியலூர் வழியாக நாமக்கல்லுக்கு நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இத்திட்டம் நிறைவேறினால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும், இத்திட்டம் வந்தால் 60 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேறும் எனவும் குறிப்பிட்டார்.
தேர்தலில் ஊழல் செய்யாதவர்களாக, லஞ்சம் வாங்காத நல்லவர்களை, தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திமுகவினர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி மக்களை ஏமாற்றி,குழப்பி விடுவதாக குற்றஞ்சாட்டினார்.
விவேகானந்தர் போன்றவர் மோடி எனவும், நாட்டு மக்கள் கஷ்டப்படகூடாது என இரவு பகலாக உழைத்து கொண்டு இருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தருக்கு வானவேடிக்கை முழங்க தேசிய ஜனநாயக கூட்டணியினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அப்போது பேசிய அவர், 2019 வாக்குறுதியின்படி 118 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாகக் குறிப்பிட்டார்.
தான் மீண்டும் எம்பி ஆனால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் எம்பி, மோடியின் கரத்தை வலுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தினார்.
2. மக்களுக்கு, தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட ஒரு துணிவு வேண்டும் என பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டையூர் பகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், பிரதமர் மோடி தூய்மையான ஆட்சியை கொடுத்துள்ளதாகவும், உலக நாடுகள் அவரை பெருமை கொள்வதாகவும் புகழாரம் சூட்டினார். மேலும் தமிழ்நாட்டில் எல்லா அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டை ஆளும் கட்சி ஊழலில் அதிகமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில், தான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு புத்தகத்தை வெளியிட ஒரு துணிவு வேண்டும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, கோணப்பாதை கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு பேசிய அவர், கல்விக்கான தெய்வம் சரஸ்வதி என்றும், அதற்காக தாமரையை மறந்துவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிட வேண்டும் என்றும் கூறினார். மேலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை என அறிவுறுத்திய டாக்டர் பாரிவேந்தர், அனைவரும் வரும் 19-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
திருச்சி மாவட்டம் சிக்கத்பூர் பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர். பாரிவேந்தர், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியினர் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து பாரிவேந்தருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைதொடர்ந்து பேசிய அவர், ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக்கி, அவர்கள் குடும்பங்களில் விளக்கேற்றி உள்ளதாகக் கூறினார். பிரதமர் மோடி வந்த பிறகு இந்தியாவின் பெயரும், பெருமையும் அதிகரித்து உள்ளதாகவும், நல்லவர்களை MPயாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஊழல் கட்சிதான் இன்று தமிழ்நாட்டை ஆள்கிறது எனவும், ஊழல் கட்சியிலிருந்து வருபவர்கள் ஊழல் வாதிகள் எனவும் விமர்சித்தார். இதையடுத்து தன்னை வெற்றி பெறச் செய்தால் சிக்கதம்பூர் கிராமத்தில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், மாவீரன் சுந்தரலிங்கத்திற்கு சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
- இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
- கொட்டையூர் , ரெங்கநாதபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள கொட்டையூர் , ரெங்கநாதபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.
குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.
இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.
பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 150- 200 படுக்கை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். 2 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்து கொரோனா காலகட்டத்தில் எண்ணற்ற மக்களை காப்பாற்றி உள்ளேன்.
நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .
இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.
மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.
இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.
யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
- தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள், அமைச்சர்களை சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் புத்தகமாக வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
- தயவு செய்து ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குணம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக வழிநெடுகிலும் மக்கள் பூக்கள் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், தி.மு.க. என்பது ஊழல் கட்சி எனவும், ஊழல்வாதிகளையும் அவர்களின் குடும்பத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னை M.P.யாகத் தேர்ந்தெடுத்தால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் உறுதியளித்தார். பரப்புரையில், தேசிய ஜனநாய கூட்டணிக் கட்சியினர், ஐ.ஜே.கே. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து கல்பாடி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் பிரசாரம் மேற்கொண்டபோது, ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர். அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள், அமைச்சர்களை சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் புத்தகமாக வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் நகரங்களை இணைக்கும் ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து சிறுவாச்சூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், நீண்ட நாள் கோரிக்கையான சிறுவாச்சூர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், மக்களுக்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டு தற்போது மக்களைச் சந்திக்க வந்துள்ளதாகவும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி நேர்மையான ஆட்சி கொடுத்துள்ளதாகக் கூறிய டாக்டர் பாரிவேந்தர், தயவு செய்து ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
- 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள்.
- நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று பொரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கல்பாடி, சிறுவாச்சூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தலில் உங்களின் பொண்ணான வாக்கை தாமரை சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்.
கல்பாடி என்பது நெகிழ்ச்சி தரக்கூடிய கிராமமாக உள்ளது. அதேபோல, இங்கு கூடியிருக்கும் மக்களின் முகத்தில் உள்ள சிரிப்பை பார்க்கின்றபோது நம்பிக்கை பிறக்கிறது.
நீங்கள் வேறு யாருக்கு வாக்குத்தர முடியும் என்று யோசித்து பாருங்கள். 2019ம் தேர்தலின்போது, பல ஊருக்கு சென்றிருக்கிறேன். உங்களை சந்தித்திருக்கிறேன். வாக்கு கேட்டிருக்கிறேன்.
அப்போது, மக்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்ன தெரியுமா? 6,83,000 வாக்குகள். 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்து டெல்லிக்கு அனுப்புனீர்கள். டெல்லிக்கு சென்று எங்கள் ஊரின் நிலைமையை சொல்லி நிதி கொண்டு வர அனுப்புனீர்கள்.
நீங்கள் அனுப்பிய உணர்வும், நியாயமும் வீண்போகவில்லை. மீண்டும் வந்திருக்கிறேன் என்றால் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.
அனைவரின் வீட்டிலும் புத்தகம் வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தில், எத்தனை முறை, எதற்காக எந்த அமைச்சரை சந்தித்து, பிரதமர் மோடியை சந்தித்து முதல் கொண்டு இதில் இடம்பெற்றிருக்கிறது.
அதை படித்தால், பாராளுமன்ற உறுப்பினர் சரியாகதான் செய்துக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.
அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் இந்த நகரங்களை இணைக்கும் ரெயில் பாதை தேவை என 50 ஆண்டு காலமாக முயற்சி செய்துக் கொண்டீர்கள்.
அதற்கான கோப்புகளை கொண்டு பிரதமரிடம் சென்றேன். உடனே ரெயில்வே அமைச்சரை அழைத்து விசாரித்தார். அதற்கு 1000 கோடி ஆகும் எனவும் அதில் முதலீடு செய்தால் லாபம் வராது என ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
மோடியின் உத்தரவை அடுத்து, 2024 முழு பட்ஜெட்டில் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட இருக்கிறார்கள். இது எனக்கும் மன நிறைவு.
இதுபோன்று, மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது.
- மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர்:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிகள் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 18004259188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 299188, 299492, 299433, 299255 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற செல்போன் செயலியில் புகைப்படமாகவும், வீடியோ, ஆடியோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம். இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வரை தொலைபேசி வாயிலாக 13 புகார்களும், சி விஜில் என்ற செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது. இந்த புகார்கள் அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மக்களின் 50 ஆண்டு கால கனவு திட்மான ரயில்வே திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
- சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு, கல்வி தெய்வமான சரஸ்வதி அமர்ந்திருக்கும் பீடமான தாமரைக்கு வாக்களியுங்கள்.
பெரம்பலூர் தொகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு திட்மான ரயில்வே திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என பெரம்பலூர் மக்களவைத் தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதியளித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், உமையாள்புரம், செவந்தி லிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, வெள்ளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வாணவேடிக்கை முழங்க, பட்டாசு வெடித்து கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, காமாட்சிபட்டி கிராமத்திற்கு வருகை தந்த பாரிவேந்தருக்கு, கூட்டணிக் கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்கள் ஆட்சி செய்தால் சந்தோஷம் வரும் கெட்டவர்கள் ஆட்சி செய்தால் கஷ்டம்தான் வரும் எனத் தெரிவித்தார். 5 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களை புத்தகமாக வெளியிட்டிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் பகுதிகளை இணைக்கும் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, தண்டலைப்புத்தூர் பகுதியில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தர், தன் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது எனத் தெரிவித்தார். மத்திய அரசுக்கு பெரம்பலூர் தொகுதிக்கு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை முழுமையாக மக்கள் திட்டங்களுக்காக செலவு செய்துள்ளதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு, கல்வி தெய்வமான சரஸ்வதி அமர்ந்திருக்கும் பீடமான தாமரைக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து IJK தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து புமுதேரி, வடசேரி , பில்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், இம்முறை வெற்றி பெற்றால் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம்10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு திட்டத்தை மக்கள் உயர் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். மேலும் பேரூர் பகுதியில் இடிந்துள்ள கான்கிரீட் வீடுகளை பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சரி செய்து கொடுக்கப்படும் எனவும் சாலை விரிவாக்க பணி மற்றும் தொகுதிக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் ரவி பச்சமுத்து கூறினார். இதில் BJP தோகைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா, பிரதீப், IJK மாநில துணை செயலாளர் நெல்லை ஜீவா, மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வடக்கு ஈச்சாம்பட்டி, சிறுகானூர், நடு இருங்கலூர், கீழ வானகரம் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.
பாராளுமன்ற தொகுதி வடக்கு ஈச்சாம்பட்டி, சிறுகானூர், நடு இருங்கலூர், கீழ வானகரம் மற்றும் பல்வேறு இடங்களில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.
குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். சிறுகனூரில் மேம்பாலம், தரைப்பாலம், ரேஷன் கடை போன்றவற்றை அமைத்து கொடுத்திருக்கிறேன்.
இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 108 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி தலைமையிலான 70 மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு 10 ஆண்டுகள் முதலமைச்சாராக இருந்தார். குஜராத்தில் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.
நடு இருங்கலூரில் பேசும் போது, தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக அரசு வெற்றி பெற்ற பிறகு 3 ஆண்டுகள் கழித்தே மகளிர் உரிமை தொகை ரூ.1000 அளித்தனர். 3 வருடங்களில் ஒருவருக்கு 36 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இந்த 36 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மாதம் 1000 ரூபாய் கொடுத்திருந்தால் சந்தோஷபட்டிருக்கலாம். ஐந்து வருட ஆட்சியில் 2 வருடங்கள் மட்டும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். போலி வாக்குறுதிகளை மட்டுமே திமுக குடும்ப ஆட்சில் கொடுக்க முடியும். திமுக ஆட்சியில் 8.75 கோடி கடன் வைத்துள்ளது. திமுக அரசு கஜானவை காலி செய்து உள்ளனர். ஒவ்வொரு தமிழன் மீது கடன் சுமையை ஏற்றி உள்ளனர்.
ஆகவே, மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் திரும்பி பார்க்கின்றனர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை என்று அவர் பேசினார்.