search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தியாகதுருகம் அருகே வாலிபர் மீது தாக்குதல்  போலீசில் புகார்
    X

    தியாகதுருகம் அருகே வாலிபர் மீது தாக்குதல் போலீசில் புகார்

    • விஜய குமார் ஆகியோரைஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உதயமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் பிரவீன் குமார் (வயது 20) இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏழுமலை என்பவர் ஏன் என்னை திட்டினாய் என பிரவீன் குமாரிடம் கேட்டுள் ளார். தொடர்ந்து ஏழுமலை தனது நண்பர்களான வடிவேல், வீராசாமி மற்றும் மணிராஜ் ஆகியோருடன் சேர்ந்து பிரவீன் குமார், அவரது தாய் அய்யம் மாள், அண்ணன் விஜய குமார் ஆகியோரைஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லேசான காயமடைந்த பிரவீன் குமார், அய்யம்மாள், விஜயகுமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி னார். இது குறித்து பிரவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ஏழுமலை, வடிவேல், வீரமணி, மணிராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×