search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் தங்கம் பறிமுதல்
    X

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் தங்கம் பறிமுதல்

    • சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினமும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கடத்தி வரப்படும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது 3 பயணிகள் தங்களது லேப்டாப்பில் தங்க தகடுகள், தங்க கட்டி, தங்க செயின் ஆகியவற்றை மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம். அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 26 லட்சம் ஆகும். இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×