search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
    X

    அம்பேத்கார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

    • அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது.
    • வன்புகொடுைமகளில் இருந்து சமூக நீதி கிடைக்க வலியுறுத்தல்

    புதுக்கோட்டை,

    டாக்டர் அம்பேத்காரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நம்புரன்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, சி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி, பேராசிரியர் சுந்தரவள்ளி, அ.ம.இ. மாநில செயலாளர் மு.மெய்யர் மற்றும் பலர் சிறப்புரையாற்றினார்.இறுதியாக தலைமையுரையாற்றிய அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர்இளமுருகு முத்து, வேங்கைவயல் பிரச்சனையில் அரசின் அணுகுமுறையும், காவல் துறையின் மெத்தனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். 110 நாட்களை கடந்தும் இன்னும் ஒரு குற்றவாளிகளையும் கண்டு பிடிக்காதது அரசின் நிர்வாகக் திறமையை கேள்விக்குறி யாக்கியுள்ளது என்றும் இது போன்ற வன்கொடுமைகளில் சமூக நீதி கிடைக்க வேண்டுமானால், அம்பேத்காரிய, பெரியாரிய சிந்தனையாளர்கள் அனைவரும் கட்சிகளை கடந்து ஓரணியில் நின்று அநீதிக்கு எதிராக போராடவேண்டும் என்று இளமுருகு முத்து தனதுரையில் பேசினார்.

    Next Story
    ×