என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கந்தர்வகோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு
By
மாலை மலர்7 Jun 2023 12:11 PM IST

- கந்தர்வகோட்டை பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதுப்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளின் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து கந்தர்வகோட்டை தாலுக்கா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திட்ட அலுவலர் கவிதா பிரியா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்டாட்சியர் காமராஜ், ஆணையர்கள் நளினி, திலகவதி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
X