search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடி அருகே - விஷ பாம்பு கடித்து மாணவி மரணம்
    X

    கறம்பக்குடி அருகே - விஷ பாம்பு கடித்து மாணவி மரணம்

    • சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது.

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மலையூர் மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரின் மகள் சந்தியா(வயது 15). அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அலறி துடித்துள்ளார். பெற்றோர்கள் கேட்ட போது, ஏதோ கடித்து விட்டதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்தியாவை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்ட போது, சந்தியாவை பாம்பு தீண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சந்தியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×