search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி தாலுகா எருக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 8-ந் தேதி முதல் கணபதி ஹோமத்துடன் விழாதொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது

    கோயிலை வலம் வந்து பின்பு கோபுரக் கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பாலாஜி ஐயர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×