search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி தவறி விழுந்து பலி
    X

    ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி தவறி விழுந்து பலி

    • புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறியபோது பறிதாபம்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கர்கேட்டா(22), திருமணமானவர்.இவர் ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    அசோக் கர்கேட்டா தொழிற்சாலையின் மேலே புறாக்கள் இருப்பதைக் பார்த்து அடிக்கடி மேலே சென்று புறாக்களை பிடித்து வந்துள்ளார்.

    நேற்று காலையிலும் புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவலறிந்த போலீசார் அசோக் கர்கேட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×