என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி மர்ம சாவு
நெமிலி:
நெமிலி அடுத்த ஒச்சேரியில் உள்ள மக்லின் கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று மிதந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்கு அடைந்தனர். பின்னர் ஒச்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மிதந்து கிடந்த பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதிய தெரு பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து இங்கு வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.