search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் பைக் திருடிய வேலூர் வாலிபர் கைது
    X

    அரசு ஆஸ்பத்திரியில் பைக் திருடிய வேலூர் வாலிபர் கைது

    • 4 பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்

    வாலாஜா:

    வாலாஜாபோலீசார் வி.சி.மோட்டூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகமோட் டார்சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சலீம் (வயது 20) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சொந்த ஊரில் வாகனங்களை திருடினால் வெளியில் தெரிந்துவிடும் என நினைத்து, ராணிப்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாலாஜா அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகளை திருடியுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு துணையாக இருந்த அவருடைய நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×