என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் சாரல் மழை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
- மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
- முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 856 கனஅடியாக உயர்ந்தது.
கூடலூர்:
கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இந்த நிலையில் நேற்று மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 856 கனஅடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1356 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.95 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 68.19 அடியாக உள்ளது. 1200 கனஅடி நீர் வருகிறது. நேற்று 2219 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1349 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. தண்ணீர் வரத்து மற்றும் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 10.4, தேக்கடி 6.2, வீரபாண்டி 3, போடி 1.2, மஞ்சளாறு 2.6 மி.மீ. மழையளவு பதிவானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்