search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் சாரல் மழை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் சாரல் மழை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    • மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 856 கனஅடியாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இந்த நிலையில் நேற்று மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 856 கனஅடியாக உயர்ந்தது.

    அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1356 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.95 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.19 அடியாக உள்ளது. 1200 கனஅடி நீர் வருகிறது. நேற்று 2219 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 1349 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. தண்ணீர் வரத்து மற்றும் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 10.4, தேக்கடி 6.2, வீரபாண்டி 3, போடி 1.2, மஞ்சளாறு 2.6 மி.மீ. மழையளவு பதிவானது.

    Next Story
    ×