search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை- பா.ம.க. பொது நிழல் நிதி நிலை அறிக்கையில் தகவல்
    X

    வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை- பா.ம.க. பொது நிழல் நிதி நிலை அறிக்கையில் தகவல்

    • கோயம்பேடு பஸ் நிலையம் பூங்காவாக மாற்றப்படும்.
    • 158 நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதிலும் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற 2003-2004-ம் ஆண்டு முதல் பா.ம.க. சார்பாக பொது நிழல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று பொது நிழல் நிதி நிலை அறிக்கையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

    இந்த அறிக்கையில் மொத்தம் 109 தலைப்புகளில் 359 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,91,602 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப் பான முறையில் கையாளு வதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,02,010 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்ப தால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

    நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,68,978 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,97,123 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்ப தற்காக அசலாக செலுத்தப் படும்.

    தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் 6.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அவற்றை நிரப்ப நடப்பாண்டில் 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும்.

    அடுத்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மொத்தம் 7.5 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்

    தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

    தமிழ்நாட்டில் ஜூலை 25-ந்தேதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    உள்ளாட்சி அமைப்பு களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஜனவரி 25-ந்தேதி உலக தமிழ் மொழி நாளாக கடைபிடிக்கப்படும். ஏப்ரல் 1-ந்தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.

    மே 1-ந்தேதி முதல் மது விலக்கு அமுலுக்கு வரும். மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும். புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.318-க்கு வழங்கப்படும்.

    பெண்கள் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். வேலையில்லாத இளைஞர் களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்து இருந்தால் ரூ.1000, தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.2000, பிளஸ்-2 தேறியிருந்தால் ரூ.3 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    சென்னையில் அனைத்து பஸ்களிலும் இலவச பயணம், கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்கா வாக மாற்றப்படும். விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படும். மின்சார கட்டணம் குறைக்கப்படும்.

    Next Story
    ×