என் மலர்
உள்ளூர் செய்திகள்

உதயசங்கர்
சேலத்தில் ஐ. ஜே.ேக. பிரமுகர் கொலை தி.மு.க. நிர்வாகி உள்பட 3 பேரிடம் அதிரடி விசாரணை

- உதயசங்கர் (வயது 30). பா.ஜ.க. இளை ஞரணி பகுதி செயலாளராக இருந்த இவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ஐ.ஜே.கே. கட்சியில் சேர்ந்தார்.
- 3 பேர் கும்பல் அங்கு வந்து தகராறு செய்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
சேலம்:
சேலம் அரிசிப்பாளையம் வண்டிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம ஜெயம். இவரது மகன் உதயசங்கர் (வயது 30). பா.ஜ.க. இளை ஞரணி பகுதி செயலாளராக இருந்த இவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ஐ.ஜே.கே. கட்சியில் சேர்ந்தார்.
கொலை
வெள்ளி தொழில் செய்து வந்த இவர் நேற்று மாலை தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் நண்பர் அலெக்ஸ்பாண்டி யன் என்பவருடன் பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டிக்கு எதிரே உள்ள ஓட்டலுக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக் கிளை நிறுத்தி விட்டு, சாலையோரம் நின்றபோது 3 பேர் கும்பல் அங்கு வந்து தகராறு செய்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் வெட்டு காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.ஆனால் மர்ம நபர்கள் துரத்திச் சென்று ஓட, ஓட விரட்டி அவரை வெட்டி னர். இதில் உதய சங்கருக்கு தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதை தடுக்க வந்த அலெக்ஸ் பாண்டி யனையும் அந்த கும்பல் வெட்டியது. இதனால் உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடினார்.
நண்பருக்கு சிகிச்சை
சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த உதயசங்கரை அங்கிருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உதயசங்கர் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து உதயசங்கரின் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. வார்டு செயலாளர்
இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார், ெகாலை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் கொலையில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ள னர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் தி.மு.க. 26-வது வார்டு செயலாளர் முருகன் (வயது 38) உள்பட 3 பேரை பிடித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார், அவர்களிடம் எதற்காக இந்த கொலை நடந்ததது? இந்த கொலைக்கும், உங்களுக்கும் தொடர்பு உள்ளதா? கொலையில் ஈடுபட்ட நபர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? கொலைக்கு உதவி செய்த வர்கள் யார்?, கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்க ளுக்கு அடைக்கலாம் கொடுத்த நபர்கள் யார்? என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் வெள்ளிப்பட்டறை உரிமையாளர் உதயசங்கரை எதற்காக கொலை செய்தார்கள் யார்? என்பது பற்றிய முழு விபரமும் தெரியவரும்.
1½ ஆண்டுகளுக்கு முன்பு உதயசங்கர் வெள்ளிகட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர்
பள்ளப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட உதயசங்கர் மற்றும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்,, மற்றொரு நபரும் என 3 பேர் சேர்ந்து ஓமலூர் பகுதியில் வெள்ளி வியாபாரியை கடத்தி வெள்ளிக்கட்டி மற்றும் பணம் பறித்தது தொடர்பான வழக்கில் ஓமலூர் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் உதயசங்கர் ஜாமீனில் வெளியே வந்த பின், வண்டிப்பேட்டையில் பெற்றோருடன் வசித்து வந்தார். அவ்வபோது வெள்ளிக்கட்டி கொண்டு வரும் வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி தனி வியாபாரத்தையும் நடத்தி வந்திருக்கிறார். வெள்ளிகட்டி வியாபா ரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.
இந்த பணம் கொடுக்கல், வாங்கல் சம்பவத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தான் மர்ம கும்பல் அவரை நேற்று சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளது, என விசாரணையில் தெரியவந்துள்ளது.