என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மயிலம் அருகே சிக்னல் கோளாறு: சென்னை ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்
By
Maalaimalar5 March 2025 9:41 AM IST

- சிக்னல் ஒயர் கட்டானதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
- ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் பசியார் ரெயில்வே பாலம் கீழ் பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தவறுதலாக சிக்னல் ஒயர் கட்டானதால் (டெலி கம்யூனிகேஷன் ஒயர்) சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில்களை இயக்க முடியவில்லை.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரி செய்தனர். அதன் பின்னரே ரெயில்கள் இயக்கப்பட்டது.
சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களும், சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்களும் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Next Story
×
X