என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த கோட்டாட்சியர்
    X

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த கோட்டாட்சியர்

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் காலை உணவு திட்டத்தை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
    • தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றி மாணவர்களுடைய கருத்தை கேட்டறிந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது எஸ்.புதூர் ஒன்றியத்தில் உலகம்பட்டி, கட்டையன்பட்டி, குளத்துப்பட்டி உள்ளிட்ட

    47 அரசு ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் இடம், நேரம், சுகாதாரம், சுவை உள்ளிட்ட ஆய்வுகளை கோட்டாட்சியர் சுகிதா மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் முறை மளிகை பொருட்கள், காய்கறிகள், பராமரிக்கும் முறை, மாணவ- மாணவிகளுக்கு தேவையான உணவு வழங்குதல், உணவின் சுவை பற்றிய மாணவர்களுடைய கருத்து ஆகியவற்றை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் ருசித்துப் பார்த்தார். அவருடன் மாவட்ட ஒன்றிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×