என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் தொடக்க விழா
    X

    ெரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் தொடக்க விழா

    • காரைக்குடி ெரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் தொடக்க விழா நடந்தது.
    • அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பில், காரைக்குடி ெரயில் நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை மையம் கமாண்டெண்ட் ெரயில்வே புரொடெக்க்ஷன் போர்ஸ் செல்வராஜ் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கொலம்பஸ் டோபோ ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல் உதவி சிகிச்சை மையத்தை பற்றி கே.எம்.சி. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் பேசுகையில் இந்த முதல் உதவிமையம் கே.எம்.சி மருத்துவமனை சார்பாக அடிப்படை அவசர சிகிச்சை உபகரணங்களுடன் 24 மணிநேரமும் ெரயில் பயணிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா மருத்துவ உதவி பெரும் வகையில் செயல்படும் என தெரிவித்தார். மேலும் அவசர ஊர்தியும் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் மற்றும் டாக்டர்கள் காளியப்பு, பாலாஜி, பிரசாந்த் மற்றும் கே.எம்.சி. மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ெரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×