search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள்  பங்கேற்ற திருவிளக்கு பூஜை
    X

    பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை

    • தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.



    மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு வீதியில் சாரதா நகரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அப்போது அம்மனுக்கு காப்பு கட்டு நிகழ்ச்சியும், பிறகு மாலை சக்தி கரகம் எடுத்தாலும் நடைபெற்றது.

    அன்றைய நாளில் தாய மங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், புதன்கிழமை மீனாட்சி அம்மன், வியாழக்கிழமை காமாட்சி அம்மன், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அம்மன் போன்ற அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    நேற்று இரவு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தடையின்றி குடும்பத்தில் சகல சுப நிகழ்ச்சிகள் நடக்க வும், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பெண்கள் மற்றும் மாண விகள் கலந்து கொண்ட னர்.

    அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. வருகின்ற 10-ந் தேதி பூச்செரிதல் விழாவும், 11-ந் தேதி முளைப்பாரி எடுத்து சுற்றி வருதல், 12-ந் தேதி பால்குடம், பூக்குழி இறங்கு தலும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×