search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார முகாம்
    X

    ஆலங்குளம் அருகே சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

    • கால்நடை மருத்துவக் குழுவினரால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சிறப்பாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள கடங்கனேரி கிராமத்தில் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருந்தகம் மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ் முன்னிலையில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருத்துவர் சந்திரன் மற்றும் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராம செல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் நடராஜன் ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக் குழுவினரால் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் நோயுற்ற கால்நடை களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், ஆடுகள் மற்றும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறப்பாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×