என் மலர்
உள்ளூர் செய்திகள்

செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

- பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முதலமைச்சர் செய்து வருகிறார் .
- வரும் 23-ந்தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலை.
* செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த சட்ட நடைமுறையும் பின்பிற்றப்படவில்லை.
* செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி உள்ளனர்.
* தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்துகிறது.
* புகார் கொடுத்தவர்களே வழக்கை திரும்பப்பெற்ற நிலையில் அமலாக்கத்துறை இதை கையில் எடுத்துள்ளது.
* கடந்த 9 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனைகளில் 30-க்கும் குறைவானவர்களே குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளது.
* 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 112 இடங்களில் மட்டுமே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
* கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்தவர் செந்தில் பாலாஜி.
* கொங்கு மண்டலத்திலாவது வாக்கு வாங்கலாம் என எண்ணிய பாஜகவின் திட்டத்தை செந்தில் பாலாஜி தகர்த்ததால் கைது நடவடிக்கை.
* ஒரு தனி நபரின் பகை மற்றும் கொள்கை பகை ஆகியவை காரணமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
* பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முதலமைச்சர் செய்து வருகிறார் .
* வரும் 23-ந்தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
* பதற்றத்தில் உள்ள பாஜக அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வருகிறது.
* அண்ணாமலை தோல்விக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என அவர் நம்புகிறார். அதனால் செந்தில் பாலாஜி மீது கோபம்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.