என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்- மத்திய மந்திரி வழங்கினார்
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்.
- மத்திய அரசு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங்பூரி கலந்து கொண்டு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் எடுத்துரைத்தார்.
அதைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் மற்றும் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயளாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
மத்திய அரசு திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
Next Story