என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமண ஆசைகாட்டி 10-ம் வகுப்பு மாணவியை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர் போக்சோவில் கைது
    X

    திருமண ஆசைகாட்டி 10-ம் வகுப்பு மாணவியை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர் போக்சோவில் கைது

    • சிறுமியின் பெற்றோர் வாலிபர் குறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டையை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 7 மாத காலமாக காதலித்து வந்தார்.

    பின்னர் சம்பவத்தன்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். அதனை வீடியோ பதிவு செய்து கொண்டார். பின்னர் இதனை வெளியில் யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் ஞானசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    Next Story
    ×