என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ரெயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்:சின்னசேலம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்21 Oct 2023 1:23 PM IST
- அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
- உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ெரயில் நிலையம் தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றினர்.
பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இது கொலையா? அல்லது தற்கொலையா? அல்லது ெரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X