search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரெயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்:சின்னசேலம் போலீசார் விசாரணை
    X

    ரெயில் நிலையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்:சின்னசேலம் போலீசார் விசாரணை

    • அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ெரயில் நிலையம் தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதனைப் பார்த்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றினர்.

    பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு முருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இது கொலையா? அல்லது தற்கொலையா? அல்லது ெரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×