என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் மனைவியை எரித்துக்கொன்றது ஏன்?- கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    காதல் மனைவி கமலியுடன் ஜான்கில்பர்ட்.


    காதல் மனைவியை எரித்துக்கொன்றது ஏன்?- கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

    • ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    கடையநல்லூர்:

    தென்காசி அருகே உள்ள இலத்தூர் இனா விலக்கு பகுதியில் கடந்த 11-ந்தேதி ஒரு இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமலி (வயது 30) என்பதும், அவரை அவரது கணவர் ஜான்கில்பர்ட் (33) குடும்ப பிரச்சனையில் கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஜான் கில்பர்ட்டும், டெய்லரான கமலியும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜான் கில்பர்ட் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரச்சனையை தவிர்க்கும் விதமாக ஜான் கில்பர்ட் தனது மனைவியுடன் தனியாக வீடு பார்த்து தனி குடித்தனம் சென்றார்.

    அங்கிருந்து தனியார் நிறுவனத்திற்கு கமலி வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கமலியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கமலி கர்ப்பம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தச் சொல்லிவிட்டார். அதையும் மீறி கமலி வேலைக்கு சென்றுள்ளார்.

    இதனால் ஜான் கில்பர்ட் தனிக்குடித்தனத்தை காலி செய்து விட்டு தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் மீண்டும் சொந்த வீட்டிலேயே வசித்து வந்தார். அதன் பின்னர் மாமியாருடன் சேர்ந்து வசிப்பது பிடிக்காததால் தொடர்ந்து மாமியார்-மருமகள் இருவருக்கும் மத்தியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று மாமியார்-மருமகள் இடையே சமையல் அறையில் வைத்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மாமியார் வெளியே சென்று விட்டார். உடனே சமையலறைக்குள் சென்று ஜான் கில்பர்ட் தனது மனைவி கமலியுடன் வாக்குவாதம் செய்தார்.

    ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்து மனைவியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் கமலியின் உடலை தன்னுடைய சகோதரர் தங்க திருப்பதி என்பவரின் உதவியுடன் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதிக்கு காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து அவரது உடலை தீவைத்து எரித்து விட்டு 2 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ஜான் கில்பர்ட்டையும், அவரது சகோதரர் தங்க திருப்பதி யையும் கைது செய்த போலீசார், ஜான் கில்பர்ட் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    Next Story
    ×