என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
அமைச்சர் துரைமுருகனிடம், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மனு
By
TNLGanesh16 Oct 2023 2:47 PM IST

- சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது.
- அணையில் இருந்து உபரி நீர் வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
தென்காசி:
தமிழக நீர் வளம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகனை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சென்னையில் நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சுரண்டை நகராட்சி பகுதியில் ஊரின் நடுவே, சென்னை கூவம் ஆற்றை போன்று செண்பக கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் வழியாக அடவிநயினார் அணையில் இருந்து உபரி நீர் விவசாயத்திற்கு வரும்போது அதனுடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அங்கு கான்கிரீட் தளம் அமைத்து தருவதற்கு தனியாக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
X