search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
    X

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

    • மண்டபம்-பாம்பனை இணைக்கும் புதிய ரெயில் பாலம்.
    • பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை.

    ராமேஸ்வரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெயில்பாலம் அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்ட மத்திய அரசு முடிவெடுத்தது.

    அதன்படி ரூ.545 கோடி மதிப்பில் மண்டபம்-பாம்பனை இணைக்கும் வகையில் பிரமாண்டமாகன புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. அடுத்த மாதம் திறக்கப்படும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில் பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தில் இன்று என்ஜின் மற்றும் 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 20 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    அப்போது பாலத்தின் நடுவே உள்ள தூக்குபாலத்தின் உறுதி தன்மை, அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதிய பாலத்தில் ரெயில் இயக்கியது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×