search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்- நண்பரை கத்தியால் குத்திவிட்டு டிரைவர் தற்கொலை
    X

    மனைவியுடன் பேசியதால் ஆத்திரம்- நண்பரை கத்தியால் குத்திவிட்டு டிரைவர் தற்கொலை

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மேல கடம்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாபிச்சை. இவரது மகன் நாகராஜன்(வயது 35). இவரது மனைவி ரம்யா(32). நாகராஜன் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்த நிலையில் அங்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நாகராஜனும், அதே ஊரை சேர்ந்த சுதாகர் என்பவரும் கோவையில் கார் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நாகராஜன் வீட்டுக்கு சுதாகர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    அப்போது சுதாகரிடம் ரம்யா பேசி பழகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் கடந்த 9ந்தேதி சுதாகரை கத்தியால் குத்தியுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×