என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
- பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் :
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற கவனம் செலுத்தாமல் தமிழ் மொழியை பாதுகாப்பதாக கூறி தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Next Story