என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அவினாசியில் பா.ஜ.க.,மண்டல ஆய்வு கூட்டம்
- தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.
அவினாசி :
பா.ஜ.க., அவினாசி நகர மண்டல கூட்டம் அவினாசி சக்தி நகரில் உள்ள அரங்கில் நடந்தது. இதில்சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட பொதுசெயலாளர் ருத்ரசாமி கலந்து கொண்டு ஆய்வு மேற்க்கொண்டார், நகர நிர்வாகிகள், கிளை தலைவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், ஆகியோர்களின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தி வரும் காலங்களில் கட்சியினரின் செயல்பாடு, பொது மக்களின் குறைகளை அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவது, தேர்தலை எதிர் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அவினாசி நகர தலைவர் தினேஷ்குமார், நகர பார்வையாளர் உதயகுமார், பொதுசெயலாளர்கள் விஜயகுமார், மோகன்குமார், நகர பொருளாளர் ரமேஷ்குமார், துணை தலைவர்கள் பாலகிருஷ்ணன், நந்தகுமார், சித்ரா, விஜயலட்சுமி, நகர செயலாளர்கள் தனசேகரன்,பைரவன் உட்பட நகர,அணி, நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.