என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உணவு பொருள் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம் உணவு பொருள் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/29/1737630-untitled-1.jpg)
X
கோப்புபடம்.
உணவு பொருள் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம்
By
மாலை மலர்29 July 2022 12:56 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உணவு பொருள் குறித்து புகார் அளிக்க க்யூ.ஆர்.,கோடு வசதியுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
- போட்டோவுடன் அனுப்ப 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பொருள் தரமின்மை குறித்து விரைவில் புகார் அளிக்க வசதியாக, க்யூ.ஆர்.,கோடு வசதியுடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
உணவு பொருள் கலப்படம், தரமில்லாத உணவு விற்பனை, காலாவதியான பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறையில் புகார் செய்யலாம். போட்டோவுடன் அனுப்ப 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓட்டல், பேக்கரி போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் விரைவாக புகார் அனுப்ப வசதியாக க்யூ. ஆர்., கோடு வசதியுடன் கூடிய, ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி உணவு பொருள் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம் என திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
X