என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
வெள்ளகோவிலில் அரசு ஊழியர்கள் போராட்டம்
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட கிளை தலைவர் குப்புசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ரதி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முருகேசன், கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரியும், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு என எவ்வித அறிவிப்பும் இல்லாததை கண்டித்தும் அதை நிறை வேற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story