என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
உடுமலையில் ஓய்வூதியர்கள் ஆர்பாட்டம்
- அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.
உடுமலை :
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டிஎன்ஜிபிஏ. வட்ட தலைவர் தாசன் தலைமை தாங்கினார்.
மடத்துக்குளம் வட்டக்கிளை நிர்வாகி மாவளப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.எல்லம்மாள், உடுமலை வட்ட செயலாளர் விஜயகுமார் கோரிக்கை விளக்கம் அளித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு உடுமலை வட்ட தலைவர் செல்லத்துரை வாழ்த்துரை வழங்கினார். உடுமலை பொருளாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.
Next Story