என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டுமனை பட்டா விவகாரம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
Byமாலை மலர்19 Sept 2022 4:17 PM IST
- 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
- வக்புவாரிய அலுவலகத்தில் தடையின்மை சான்றிதழ் வாங்கி வரக் கோரி பதிவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
அவிநாசி சேவூர் அருகே 1996 ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தேவேந்திரர்நகர் மக்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடு கட்ட கடன் வாங்க சென்றபோது சார்பதிவாளர் அலுவலகத்தில், வீட்டுமனைகள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வக்புவாரிய அலுவலகத்தில் தடையின்மைச் சான்றிதழ் வாங்கி வரக் கோரி பதிவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேவேந்திர நகர் பகுதி மக்கள் இன்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Next Story
×
X