என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் கட்டிட கலைஞர் நலச்சங்கம் சார்பில் பேரணி
Byமாலை மலர்2 May 2023 10:39 AM GMT
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கட்டிட கலைஞர் நலச்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் மே தினத்தையொட்டி கட்டிட கலைஞர் நல சங்கத்தின் சார்பில் 2 ம் ஆண்டாக பேரணி, சங்க கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் எஸ். கண்ணன் தலைமையில், சட்ட ஆலோசகர் வி.கந்தசரவணகுமார் முன்னிலையில் நடந்தது.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளகோவில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக தொடங்கி சிவநாதபுரம் வழியாக கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்திற்கு வந்தனர். திருவள்ளுவர் நகர், சிவநாதபுரம், கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகம் முன்பு கட்டிடக்கலைஞர்கள் நல சங்க கொடி ஏற்றப்பட்டது. சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் மற்றும் கட்டிடக்கலைஞர்கள் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X