search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    லைவ் அப்டேட்ஸ்: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு

    • வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.
    • பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னை:

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-

    * வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். உரிமைத் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு. மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பிறந்தநாளான செப்.15-ந்தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    * நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு.

    * சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்.

    * வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்.

    * பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்.

    * பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

    * சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

    Live Updates

    • 20 March 2023 10:13 AM IST

      தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    • 20 March 2023 10:12 AM IST

      மொழிப்போர் தியாகி தாளமுத்து, நடராஜருக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

    • 20 March 2023 10:10 AM IST

      திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    • 20 March 2023 10:10 AM IST

      இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    • 20 March 2023 10:09 AM IST

      பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு.

    • 20 March 2023 10:09 AM IST

      எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதியாக உட்கார சபாநாயகர் அறிவுரை.

    • 20 March 2023 10:09 AM IST

      நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சிகளில் அமளியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×