என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தினமும் 100 தெரு நாய்களுக்கு கருத்தடை
- தினமும் 100 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட உள்ளது
- இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த
திருச்சி
திருச்சி மாநகரில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் மற்றும் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர், அரியமங்கலம் மற்றும் கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் தலா ரூ.51 லட்சம் செலவில் கருத்தடை மையங்களை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது இந்த புதிய கருத்தடை மையங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு மையமும் 2000 முதல் 3000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆபரேஷன் தியேட்டர் தனிமைப்படுத்தும் அறை, சிகிச்சை அறை, ஆப்ரேஷனுக்கு முன்பும் பின்பும் தங்க வைக்கும் அறைகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் 15 நாய்களுக்கு மட்டுமே கருத்தடைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த புதிய மையங்கள் செயல்படும் பட்சத்தில் தினமும் 75 முதல் 100 தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்ய முடியும்.
கடந்த 2017-ல் இருந்து 2021 வரை 4,883 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 602 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய மாநகராட்சி சார்பில் ரூ.700 செலவு செய்யப்படுகிறது. இந்த தெரு நாய்களை பிடிப்பதற்கு இரண்டு சிறப்பு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்