search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் சாவு
    X

    வாலிபர் சாவு

    • விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வாய்பூட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(37). இவர் கோவில் திருவிழாவிற்காக விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெயராம் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஜெயராமின் சகோதரர் மாரிசாமி கொடுத்த புகாரின்பேரில் சூளக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×