search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய வண்ணாரப்பேட்டையில் கார் திருடர்கள் 3 பேர் கைது
    X

    கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்


    பழைய வண்ணாரப்பேட்டையில் கார் திருடர்கள் 3 பேர் கைது

    • பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது.
    • ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அனுசியா என்பவரது வீட்டில் திருடு போனது. இதேபோல் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம குமார் என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துதீவிர விசாரணை நடத்தினர்.

    கார் திருட்டு தொடர்பாக பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த சோழவரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இன்பராஜ், கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பார்வதி ராஜா என்கிற பாரதி (36) சென்னை சூளைமேடு பெரியார் பாதையை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதில் இன்பராஜ் மீது விருதுநகர், பனங்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இன்பராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தெருவோரங்களில் நிறுத்தப்படும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடி வந்து உள்ளனர். அவர்கள் 50க்கும் மேற்பட்ட கார்களை நோட்டமிட்டு திருடி இருப்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×