என் மலர்tooltip icon

    கதம்பம்

    பேய் அறிவு தெரியுமா?
    X

    பேய் அறிவு தெரியுமா?

    • தன்னை அறிதல் என்பது ஒரு மிகப்பெரிய ஞானம்.
    • அலைபாயாத மனதால் மட்டுமே தன்னை அறிய முடியும்.

    உலகியல் பற்றிய அறிவு மட்டுமே அறிவு என்று நம்பிக்கொண்டும் அதையே சொல்லிக்கொண்டும் அதற்காக அலைந்துக்கொண்டும் இருக்கிறது இந்த உலகம். உலகியல் பற்றிய அறிவு மட்டுமே அறிவு என்று நம்புவது உண்மையில் அறியாமை.

    தன்னையே தான்முழுவதும் அறிந்து வைத்திருக்கிற அறிவுதான் உண்மை அறிவு. தன்னை அறிதல் என்பது ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, முன்னேற்றத்திற்கும் அதுவே அடைப்படை !

    தன்னையே தன்னுடைய குறைநிறைகளோடு தனக்குத் தெரியாதென்றால் பிறரையும் பிறவற்றையும் நாம் அறிவதிலும் என்ன முழுமை இருக்க முடியும்?

    தன்னை அறிதல் என்பது ஒரு மிகப்பெரிய ஞானம். தன்னை அறிகிற வேலையை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் அறிகிற அறிவு பேய் அறிவு.! என்கிறார் திரு மூலர்.

    தன்னை அறிவது அறிவாம் அஃதுஅன்றிப்

    பின்னை அறிவது பேய்அறிவு ஆகுமே

    -(திருமந்திரம் 2318)

    பேய்கள் ஓர் இடத்தில் நிலைகொள்ளாமல் உழலும்; அங்கும் இங்கும் அலையும்; தவிக்கும். அவற்றுக்கு ஏதேனும் ஒரு பிடிமானத்தில் தங்களை நங்கூரம் இட்டு நிறுத்திக்கொள்ளத் தெரியாது.

    அதைப் போல, கண்டதையெல்லாம் அறிந்து, உலகில் தான் அறிந்ததை எல்லாம் தனக்கே உரித்தாக்கிக்கொள்ள நினைத்து, தானே அத்தனைக்கும் ஆசைப்பட்டு, அதன் பின்னால் ஓடி ஓடிஅலைந்து , அது கிடைத்துவிட்டால் அதை நுகர்ந்து பின்மனம் சலித்து, கிடைக்காவிட்டால் அதுபற்றியே வருந்தி மனம் இளைக்க செய்வது பேய் அறிவு.

    அறிய வேண்டியதான தன்னபை்பற்றி அறிய, மனம் நங்கூரம் இட்டது போல் நிலைபெறவேண்டும். அலைபாயாத மனதால் மட்டுமே தன்னை அறிய முடியும்.

    -அண்ணாமலை சுகுமாரன்

    Next Story
    ×